பெய்ஜிங்: சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்தில் மாயமான இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் இருக்கும் ஹன்யாங் மாகாணத்தில் பல தொழிற்சாலைகள் உள்ளன. அங்குள்ள ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏராளமான ரசாயனப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அப்போது தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 63 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.