அதேவேளை, காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதியில் 2004ம் ஆண்டு முதல் 2019 வரை எம்.பி. தேர்தலில் ராகுல்காந்தி வெற்றிபெற்று வந்தார். ஆனால், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியடைந்தார். அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார். நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இரு தொகுதிகளுக்கும் காங்கிரஸ் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவாரா? ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவாரா? என்று கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல்காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். அதேவேளை, அமேதி தொகுதியில் கிஷோர் லால் சர்மா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுள்ளார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, ராகுல்காந்தி ஏற்கனவே வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ள நிலையில் அவர் 2வது தொகுதியாக ரேபரேலியிலும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி: இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் appeared first on Dinakaran.