பாண்டிய மன்னனின் மீன் சிலையை மறுபடியும் வைக்க கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு: மதுரை ஆட்சியர் பதில் தர ஆணை

மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை ரயில் நிலைய விரிவாக்க பணியின்போது அகற்றப்பட்ட மீன்சிலை தொடர்பான வழக்கில் மதுரை ரயில் நிலையம் முன் வைத்திருந்த பாண்டிய மன்னனின் சின்னமான மீன் சிலையை மீண்டும் வைக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். வழக்கில் மதுரை ஆட்சியர், பொதுப்பணித்துறை செயலர், ரயில்வே கொட்ட மேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. வழக்கை 2 வாரங்களுக்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.

Related Stories: