உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் தனிப்படை போலீசார், உடன்குடி வில்லிகுடியிருப்பு பகுதியில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி விசாரித்த போது, அதிலிருந்தவர்கள் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே இருக்கன்துறையைச் சேர்ந்த ததேயூஸ் பெனிற்றோ (42), கூடங்குளம் பெருமணலைச் சேர்ந்த அருள் ஆல்வின் (40), ராதாபுரம் செட்டிகுளம் வேணுகோபால் (35) என்பதும் காரில் மூன்று பிளாஸ்டிக் கவரில் 11 கிலோ திமிலங்கல எச்சமான அம்பர் கிரிஸ் இருப்பதும் தெரியவந்தது.
