சீர்காழி: சீர்காழி அருகே மழைநீரால் 1000 கோழி, 25 ஆடுகள் உயிரிழந்தன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் பகுதியில் தொடர் மழையின் காரணமாக சுமார் 25க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து உள்ளன. மேலும் அந்த பகுதியில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தண்ணீர் வடியாமல் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வடியாமல் தேங்கி நிற்கின்றன.