சென்னை: உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகம் திரும்பிய வீராங்கனைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்யோவில் அக்டோபர் 31ம் தேதி முதல் நவ. 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த மனிஷா ராமதாஸ், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். ஈரோட்டை ருத்திக் ரகுபதி கலப்பு இரட்டையர் பிரிவில் 2 வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.