திருச்சியில் ரூ.10 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை மீட்பு: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை..!

திருச்சி: திருச்சியில் ரூ.10 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். சென்னை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு காவல்துறை இயக்குநர் முனைவர். K.ஜெயந்தமுரளி இ.கா.ப., மற்றும் காவல் துறை தலைவர் முனைவர் R.தினகரன் இ.கா.ப., தமிழகத்தின் பல பகுதிகளில் சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் என கூறி ஏமாற்றி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டதன் பேரில் P.ரவி, காவல் கண்காணிப்பாளர் சிலை திருட்டு தடுப்புப்பிரிவு அறிவுரைப்படி திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் G.பாலமுருகன் நேரடி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் பிரோமாசாந்தகுமாரி, சார்பு ஆய்வாளர்கள் ராஜேஸ், பாண்டியராஜன்,

தலைமை காவலர் 214 பரமசிவம் மற்றும் த.கா.580 சிவபாலன் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் கோயம்புத்தூர் சென்று தகவலாளி மூலமாக சிலை வாங்குபவர்கள் போன்று பேசி சிலையை கோயம்புத்தூர் கொண்டு வருமாறு கூறி அதன்படி 06.11.2022ம் தேதி அதிகாலை 05.00 மணியளவில் கோவையிலிருந்து பல்லடம் செல்லும் மெயின்ரோட்டில் இருகூர் பிரிவில் காத்திருந்த போது KL 08 BV 8040 ஹூண்டாய் கிரீட்டா காரில் வந்தவர்களை காவல் ஆய்வாளர் போலீஸ் பார்ட்டியுடன் நிறுத்தி விசாரிக்க மேற்படி காரை ஒட்டிவந்தவர் பெயர் திரு ஜெயந்த் வயது-22, த/பெ தங்கமணி, 9/121-A, இந்திராநகர், புதுசாம்பள்ளி, V.T.C நகர், மேட்டூர். எனவும்.

காருக்குள் உட்கார்ந்திருந்த மற்றொரு நபர் பெயர் திரு சிவபிரசாத் நம்பூதிரி வயது-53, த/பெ ஹரிதாசன் நம்புதரி, வைகத் குவாட்டர்ஸ், ஜாலிஜெரி கிராமம், பட்டாம்பி தாலுகா, கல்லடத்தூர் (Post). பாலக்காடு. கேரளா எனவும் கூறியுள்ளார்கள். மேற்படி காரை சோதனை செய்த போது அந்த காரின் பின்னால் டிக்கியில் வெள்ளை நிற சாக்கு பையில் சுருட்டிய நிலையில் சுமார் 3-அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச்சிலையை மறைத்து வைத்திருந்திருந்துள்ளார்கள்.

 அந்த சிலையை பற்றி அவர்களிடம் விசாரித்த போது அருள்மிகு நடராஜர் சிலையை காரில் கொண்டு வந்ததற்கு தக்க முகாந்திரம் கூறாமல் சந்தேகப்படும்படியாக முன்னுக்கு பின் முரணாக கூறியதால் எதிரிகள் மேற்படி அருள்மிகு நடராஜர் உலோகச்சிலையை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பழமையான கோவிலிலிருந்து திருடி மறைத்து வைத்திருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்வதற்காக காரில் எடுத்துவந்துள்ளார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 06.11.2022ம் தேதி திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச்சிலை மற்றும் சிலையை கொண்டு வந்த KL 08 BV 8040 ஹூண்டாய் கிரீட்டா காரையும் கைப்பற்றி காவல் ஆய்வாளர் பிரேமாசாந்தகுமாரி கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கைப்பற்றப்பட்ட சிலை கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கும்பகோணம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டள்ளது. மேற்படி மெச்சத்தக்க பணியை பாராட்டி காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் C.சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்தார்கள்.

Related Stories: