ஊட்டி: ஊட்டியில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு 1909 அக்டோபர் 15ம் தேதி ஊட்டி நகரம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை 46 கி.மீ. தூரம் உள்ள இப்பாதையில் 209 வளைவுகளும், 250 பாலங்களும், 16 சுரங்க பாதைகளும் உள்ளன. மலைகளின் நடுவே தவழ்ந்து வரும் இந்த ரயில் நூற்றாண்டை கடந்த நிலையில், இதில் பயணிக்க வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு விரும்புகின்றனர்.