கேரளாவில் எடப்பாடி ரகசிய பூஜை 5 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்

சேலம்: சேலத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வெளியே சென்ற எடப்பாடி பழனிசாமி 5 நாட்களுக்கு பிறகு சேலத்தில் உள்ள வீட்டிற்கு நேற்று வந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வாரம் திடீரென சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையம் சென்றார். அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர் எங்கே போனார் என்பது தெரியவில்லை. அவரை பார்க்க சேலம் வீட்டிற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவர் எங்கே இருக்கிறார்? என உளவு பிரிவுக்கும் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை கார் மூலம் எடப்பாடி பழனிசாமி சேலம் திரும்பினார். மாலை 5 மணியளவில் அவர் நெடுஞ்சாலைநகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். அவர் கேரளாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. தனக்குள்ள எதிரிகளை அழிக்கும் வகையில் கேரள நம்பூதிரிகள் நடத்திய யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

The post கேரளாவில் எடப்பாடி ரகசிய பூஜை 5 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார் appeared first on Dinakaran.

Related Stories: