கான்பூர்: உ.பி.யில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் டிராக்டரில் சென்ற 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் 25 பேர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உ.பி. மாநிலம் கான்பூரை சேர்ந்த கிராமவாசிகள் பலர் டிராக்டர் ஒன்றில் உனோவ் மாவட்டத்தில் உள்ள கோயில் விழாவில் பங்கேற்றுவிட்டு கான்பூர் திரும்பி கொண்டிருந்தனர். கதாம்பூர் அருகே டிராக்டர் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது அதில் பயணித்த 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமுற்றவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.