பாட்னா: முதல்வர் பதவி குறித்த விவகாரத்தில் எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் ஏதுமில்லை என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் ஜெகதானந்த் சிங் டெல்லியில் அளித்த பேட்டியில், ‘துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் அடுத்த ஆண்டு பீகார் முதல்வராக பதவியேற்பார்’ என்று கூறினார். இவரது பேச்சால் கூட்டணிக்குள் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.