சோமனூர்: கிபி 1600ம் ஆண்டில் கட்டப்பட்ட கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலயம், கோவை மறை மாவட்டத்திற்கு முதன்மை கோவிலாகவும், தாய் கோயிலாகவும் விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புபெற்ற இத்திருக்கோவில் கடந்த 2019 பசிலிக்கா திருத்தலமாக தரம் உயர்த்தி போப்பாண்டவர் அறிவித்தார். இதனால் தமிழகத்தில் 6வது திருத்தலமாக செயல்படுகிறது. இந்த ஆண்டு தேர்பவனி நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. நேற்று மாலை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாசுக்கு நன்றி வளைவில் இருந்து பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.