பாலியல் புகார் தெரிவித்த ஊட்டி அரசு கல்லூரி உதவி பேராசிரியை இட மாற்றம்: வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

ஊட்டி:  ஊட்டி அரசு கலை கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றுபவர் பிரவீணாதேவி. நேற்று முன்தினம் இவரை  திருப்பூர் மாவட்டம் காங்கயம் அரசு கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு வந்துள்ளது. இது தொடர்பாக பிரவீணாதேவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘கடந்த பிப்ரவரி மாதம் உதவி பேராசிரியர் தர்மலிங்கம் எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர், எஸ்பி, கல்லூரி கல்வி இயக்குநரகம், மண்டல இயக்குநர், கல்லூரி கல்வி இயக்ககம், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறைக்கும் புகார் அளித்தேன்.

அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் உதவி பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்   என்னை பழிவாங்கும் விதமாக காங்கயம் அரசு கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். உதவி பேராசிரியரின் சஸ்பெண்டை ரத்து செய்து  மீண்டும் பணி வழங்கியுள்ளனர். இதை திரும்ப பெற வேண்டும்’’ என்றார். கல்லூரி  முதல்வர் (பொறுப்பு) எபினேசர் கூறுகையில், ‘‘ உதவி பேராசிரியை பணியிட மாற்றம் வழக்கமானதுதான்’’ என்றார்.

Related Stories: