ஊட்டி: ஊட்டி அரசு கலை கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றுபவர் பிரவீணாதேவி. நேற்று முன்தினம் இவரை திருப்பூர் மாவட்டம் காங்கயம் அரசு கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு வந்துள்ளது. இது தொடர்பாக பிரவீணாதேவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘கடந்த பிப்ரவரி மாதம் உதவி பேராசிரியர் தர்மலிங்கம் எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர், எஸ்பி, கல்லூரி கல்வி இயக்குநரகம், மண்டல இயக்குநர், கல்லூரி கல்வி இயக்ககம், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறைக்கும் புகார் அளித்தேன்.