காஷ்மீர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் 137 கி.மீ தூரத்திற்கு மின்சார ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக இந்திய ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர், இந்திய ரயில்வே மற்றும் இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் ஆகியவை இணைந்து கடந்த 2019 முதல் பனிஹால்-பாரமுல்லா வழித்தடத்தில் மின்சார ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கிட்டதட்ட 137 கி.மீ தூரத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், வரும் 26ம் தேதி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.