குன்னூர் : குன்னூரில் செண்டை மேளம் முழங்க ஆடல் பாடல்களுடன் கோலாகலமாக ஓணம் திருவிழா நடைபெற்றது.கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் திருவிழா நாளை 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக அனைத்து வீடுகளிலும், பூக்கோலமிட்டு வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், குன்னூரில் உள்ள தனியார் கல்லூயில் மாணவிகள் சார்பில், கோலாகலமாக ஓணம் திருவிழா நடத்தப்பட்டது. இதில், கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து இயற்கையை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி, பூக்கள் மட்டுமில்லாமல், தானியம், வண்ண பூக்களால் அத்தி பூக்கோலம் இட்டு மாவேலி மன்னனை வரவேற்றனர்.