ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள தூல் பகுதியை சேர்ந்தவர் அப்துல் வாகித் (25). இவருக்கு மனைவியும், 7 மாத குழந்தையும் இருக்கின்றனர். தட்பேத் கிராமத்தில் உள்ள மதரசாவில் வாகித், ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரை போலீசார் நேற்று திடீரென கைது செய்தனர். ராணுவ உளவு அமைப்பு மூலமாக வாகித் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். இதில், பாதுகாப்பு அமைப்புகள் சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய தகவல்களை பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு அவர் பகிர்ந்து வந்தது உறுதியானது.