தஞ்சாவூர்: திடீர் உடல்நலக்குறைவால் தஞ்சாவூர் மருத்துவமனையில் டிடிவி தினகரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் நேற்றுமுன்தினம் இரவு உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற டிடிவி தினகரன், அங்கு உணவு சாப்பிட்டுவிட்டு ஓட்டல் அறைக்கு வந்தார். அப்போது அங்கு அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.