கெட்டி மேளம் கொட்டி.. மலர் மாலைகள் அணிவித்து உறவினர்களுடன் வைர விழா கொண்டாடிய தம்பதி: கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே வயது முதிர்ந்த தம்பதிக்கு வைர விழா திருமணம் நடத்தி உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆசிபெற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டி.ஜி. தோட்டை கிராமத்தில் வசிக்கும் முனியப்பா 100 வயதை கடந்தார். அவருடைய மனைவி குண்டம்மா என்கின்ற மாரம்மாவுக்கு 96 வயதாகிறது. ஆரோகியத்துடன் வாழ்ந்து வரும் இவர்களது நூற்றாண்டு விழாவை குடும்பத்தினர் கொண்டாடினர்.

தேன்கனிக்கோட்டை கதிலட்சுமி - நரசிம்மசுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் வைரவிழா கொண்டாடும் இந்த தம்பதியினருக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கெட்டிமேளம் கொட்டி மாலைகள் அணிவித்து வைரவிழா திருமணம் நடைபெற்றது. 100 வயதை கடந்த தம்பதியினரிடம் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் என 4 தலைமுறையினர் மற்றும் ஊர்மக்கள் ஆசிபெற்றனர்.

Related Stories: