ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கல்வெட்டு திறப்பு விழாவில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். ஊத்துக்கோட்டையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் பெயர் பதிந்த கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் குமரவேல், செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.