நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை தேயிலை தோட்டம் மற்றும் வீடுகளில் திடீர் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளன. கூடலூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தெய்வமலை செல்லும் சாலையில் சுமார் 70மீட்டர் தூரத்திற்கு திடீர் விரிசலும், 10 செ.மீ. ஆழத்திற்கு பள்ளமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல நடுக்கூடலூர் பகுதியில் 20கும் மேற்பட்ட வீடுகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் கிராமத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். இந்த இடங்களில் புவியியல் துறை அதிகாரிகள் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.