டெல்லி: பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ. இந்த நிறுவனம் அடிக்கடி தன்னுடைய கடன் வட்டி விகிதத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. எம்.சி.எல்.ஆர். எனப்படும் வங்கிக்கடன் வட்டி விகிதத்தை 3 மாதக் கடனுக்கு 7.15 சதவீதத்தில் இருந்து 7.35 சதவீதமாக எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. 6 மாத கால வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் 7.45 சதவீதத்தில் இருந்து 7.65 சதவீதமாக பாரத ஸ்டேட் வங்கி அதிகரித்துள்ளது. ஓராண்டு கால கடனுக்கான வட்டி விகிதம் 7.70 சதவீதமாகவும், 2 ஆண்டு கடனுக்கு 7.9 சதவீதமாகவும், 3 ஆண்டு கடனுக்கு வட்டி விகிதம் 7.8 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.