சென்னை: மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 7வது சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்றைய ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று 7வது சுற்று போட்டி தொடங்கியிருக்கிறது. 186 நாடுகள் இடையிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. ஓபன், பெண்கள் ஆகிய இரு பிரிவுகளில் நடக்கும் இந்த செஸ் திருவிழா 11 சுற்றுகளை கொண்டது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை குவிக்கும் அணி மகுடம் சூடும். இதுவரை 6 சுற்று நிறைவடைந்து தற்போது, 7வது சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதன்முறையாக இந்திய ஏ, சி அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.