திருவனந்தபுரம் : துப்பாக்கியை பயன்படுத்துவோரை துப்பாக்கியால் தான் கையாள வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் கொடுத்தே ஆக வேண்டும்.நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசும் யாருடனும் பேச்சுவார்தையே இல்லை.ஆயுதக் குழுக்களுடன் கடந்த 8 ஆண்டுகளில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.