கோவை அருகே மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நண்பர் நிறுவனத்தில் திடீர் ஆய்வு

கோவை: கோவை அருகே கோவைப்புதூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நண்பர் ராஜேந்திரனின் ஜேஆர்டி கட்டுமான நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோவை அடுத்த கோவைப்புதூரில் ஜேஆர்டி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை மேற்கொண்டு வருகிறது. கோவைப்புதூர் அருகே ஜேஆர்டி நிறுவனம் கட்டியுள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உரிய அனுமதியுடன் கட்டப்படவில்லை என வந்த புகாரின் அடிப்படையில் நேற்று கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா  தலைமையில்  அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஜேஆர்டி நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உரிய அனுமதியுடன் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். நிறுவனத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். கோவையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் வீடுகளில் ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: