திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் பொம்மி குப்பம் ஊராட்சி, 2 வார்டுக்கு உட்பட்ட ஜோன்றம்பள்ளி சாலை 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது இதனால் அந்த வழியாக பள்ளிக்குச் செல்கின்ற 1000 கணக்கான மாணவ- மாணவிகள், தனியார் கல்லூரி பள்ளி வாகனங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், அந்தப் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் சாலையின் நடுவே நாற்று நட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.