காஞ்சி எம்பி தொகுதி நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் பள்ளிக்கு மேசை, நாற்காலிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மேசை, நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் பட்டாள தெரு மற்றும் செவிலிமேடு ஆகிய பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மேசை மற்றும் நாற்காலி வேண்டும் என ஆசிரியர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் காஞ்சிபுரம் எம்பி செல்வமிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காஞ்சிபுரம் மாநகராட்சி பட்டாளத் தெரு அரசு பள்ளியில் ரூ.6.25 லட்சம் மற்றும் செவிலிமேடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ரூ.3.75 லட்சம் என மொத்தம் ரூ.10லட்சம் மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கு மேசை, நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்களை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம் மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில், நகர செயலாளர் கே.ஆறுமுகம், மேயர் மகாலட்சுமி, மண்டலக்குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: