கொழும்பு: இலங்கைக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் அனுப்பிய அரிசி, குழந்தைகளுக்கான பால் மாவு, மருந்துகள் நேற்று வந்தடைந்தது.
கடும் நிதி, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு மனிதாபிமானம், இந்தியா-இலங்கை இடையேயான நட்புறவின் அடிப்படையில் பெட்ரோலுக்கான கடன் உள்பட இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதனால், உணவு, பால் மாவு, மருந்து தட்டுப்பாட்டை போக்க இந்தியா அவ்வபோது இவற்றை அனுப்பி உதவுகிறது.