மதுரை: விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் மற்றும் மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும், அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சம் (அம்பர் கிரிஸ்), மதுரை தெற்குவாசல் பகுதி மறவர் சாவடி பகுதியில் ஒரு கடையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி குருசாமி தபாலாவுக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாருடன் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் மஞ்சணக்கார தெருவை சேர்ந்த ராஜாராம் (36) என்பவருக்கு சொந்தமான கடையில் 10 கிலோ எடை கொண்ட ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.