ஆலந்தூர்: ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, நிலமங்கை நகர், பாலாஜி நகர், சரஸ்வதி நகர், ஏஜிஎஸ் காலனி, புழுதிவாக்கம், ராம் நகர், பத்மாவதி நகர், சீனிவாசா நகர் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதை தடுக்க 4 கிலோ மீட்டர் நீளத்தில் வீராங்கல் ஒடை அமைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த ஓடையில் சாக்கடை நீர் மற்றும் கழிவுகள் கலந்ததுடன், செடி, கொடிகள் வளர்ந்து தூர்ந்தது. எனவே, இந்த ஓடையை தூர்வாரி, சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்பேரில், நீர்வளத்துறை சார்பில் வீராங்கல் ஒடையை தூர்வாரி சீரமைத்து, பக்கவாட்டு தடுப்புச்சுவர் அமைக்க ₹13.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.