கூடுவாஞ்சேரி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் சிபிஐ எம்எல் இந்த கட்சியின் மாவட்ட செயலாளர் ரணியப்பன் மற்றும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் மொத்தம் 13 பேர் நேற்று கூடுவாஞ்சேரியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.