ராணிப்பேட்டை: அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வாவது உறுதி என அரக்கோணம் எம்எல்ஏ ரவி பேசினார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை கடந்த சில நாட்களாக பூதாகரமாக வெடித்துள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தருபவர்கள் பகிரங்கமாக பொது இடங்களில் பேசி வருகின்றனர். இதனால் பொதுக்குழு கூடுவதற்கு முன்பே அக்கட்சியில் கோஷ்டி மோதல் அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நேற்று மாலை நெமிலி பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.