சிவகாசி: அதிமுகவுடன் அமமுக இணைய வாய்ப்பில்லை என சிவகாசியில் டிடிவி.தினகரன் பேசினார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது:
தொண்டர்கள் இருக்கும்வரை நான் தோற்க மாட்டேன். இறப்பது ஒருமுறை. வாழ்வது ஒருமுறை. என்ன வருகிறது என பார்த்து விடலாம்.