பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: காஞ்சிபுரத்தில் அதிமுக பிரமுகர் இல்ல திருமணத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொய் பொய்யாய் பேசும் அண்ணாமலைக்கு, ஒரு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம். உலகத்திலேயே ஒரு மகா பொய்யன் என்றால், அண்ணாமலைதான் என்று சொல்லணும். கொஞ்சம் கூட கூச்சம் அச்சம் இல்லாமல் பொய் பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி என்பது அண்ணாமலைக்கு கண்டிப்பாக தெரியும். இதனை தெரிந்துகொண்டு 1 லட்சம் ஓட்டு காணவில்லை எனக் கூறுகிறார். இதனால், 1 லட்சம் ஓட்டு காணவில்லை என அண்ணாமலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் விரல்களிலும் ஓட்டு போட்டதற்கான மை இருக்கிறது. இது நம்ப முடிகிறதா என கேள்வி எழுப்பினர். இந்த தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் சொதப்பிவிட்டது என்றார்.

The post பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: