நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைவர்கள் சந்திப்பு: எம்எல்ஏக்களும் வாழ்த்து பெற்றனர்

சென்னை: தமிழ்­நாடு மற்­றும் புதுச்­சே­ரி­யில் 40 மக்களவை தொகு­தி­க­ளி­லும் ஒரே கட்­ட­மாக கடந்த 19ம் தேதி வாக்­குப்­ப­திவு நடந்து முடிந்­தது. இந்­நி­லை­யில், தமிழ்­நாடு மற்­றும் புதுச்­சே­ரி­யில் திமுக தலை­மை­யி­லான இந்­தியா கூட்­டணி சார்­பில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­கள், மாவட்­ட பொறுப்பு அமைச்­சர்­கள், கூட்­ட­ணிக்கட்­சி தலை­வர்­கள் உள்­ளிட்­டோர் முத­ல்வர் மு.க.ஸ்டாலினை சந்­தித்து வாழ்த்­துப் பெற்று வரு­கின்­ற­னர். அந்­த­ வ­கை­யில், திமுக தலை­வ­ரும், தமிழ்நாடு முத­ல்வருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான பொன்குமார் சந்தித்து பேசினார்.

அப்போது பொன்குமார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின் போது விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் சுந்தர்ராஜ், ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். சந்திப்பின் போது தொகுதி வாரி­யான கள நில­வ­ரத்தை முத­ல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரி­வித்­த­னர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் தர் வாண்டையார் சந்தித்தார். சந்திப்பின் போது அக்கழகத்தின் இளைஞர் அணி அமைப்பாளர் வைபவ் வாண்டையார் உடனிருந்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரநிதி ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.கிருஷ்ணசாமி, வி.முத்துராஜா, இ.கருணாநிதி ஆகியோர் சந்தித்து பேசினர்.

The post நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைவர்கள் சந்திப்பு: எம்எல்ஏக்களும் வாழ்த்து பெற்றனர் appeared first on Dinakaran.

Related Stories: