இது தொடர்பாக விசாரணை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில், தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்பட்ட கடனால் வங்கிக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுனேத்ரா பவார் உள்ளிட்டோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அஜித்பவார் பாஜ கூட்டணியில் இணைந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் ஆளும் கூட்டணி சார்பில் பாராமதி தொகுதியில் போட்டியிடும் சூழலில், இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் பாஜவின் வாஷிங் மெஷின் மீண்டும் வேலை செய்ய தொடங்கிவிட்டதாக காங்கிரஸ், உத்தவ் சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
The post ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித் பவார் மனைவி விடுவிப்பு: ‘வாஷிங் மெஷின்’ மீண்டும் வேலை செய்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் appeared first on Dinakaran.