மேலூர்: மேலூர் பகுதி மாணவர்கள் மாநில சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்கள் மற்றும் கோப்பையை வென்றனர். மதுரை பாத்திமா கல்லூரியில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட குழு சிலம்ப போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 குழுக்கள் சிலம்ப போட்டியில் போட்டியிட்டன. இதில் மேலூர் பகுதியில் உள்ள வஜ்ரம் சிலம்ப பள்ளி மாணவர்கள் 16 பேர் கலந்து கொண்டனர்.