மருதாணி இலை, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி இலை, பூ, வெந்தயம், நான்கு மிளகு, காய்ந்த நெல்லி, நல்லெண்ணெய் கால் கப், தேங்காய் எண்ணெய் முக்கால் கப். ஒரு அகன்ற பாத்திரத்தில் இரண்டு எண்ணெயையும் சேர்த்து, மிதமான சூட்டில் இருக்கும் போது வெந்தயம், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி இலை, காய்ந்தநெல்லி, மிளகு, செம்பருத்தி இலை, பூ, இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியதும் வடிகட்டி பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.