டெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வருகிற 24ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் கர்நாடகாவில் 5 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவதையடுத்து, அதில் ஒரு இடத்திற்கு நிர்மலா சீதாராமனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற மாநில பா.ஜ.க. குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.