திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை துறையின் அங்கமாக உள்ள சாய ஆலைகள்,பிரின்டிங், வாஷிங் நிறுவனங்கள், மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறவேண்டும். கழிவுநீரை, ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ தொழில் நுட்பத்தில் சுத்திகரிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆயினும், முறைகேடு நிறுவனங்கள் எண்ணிக்கை குறையவில்லை. குடோன்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில், பிளாஸ்டிக் டிரம் வைத்து, பட்டன்,ஜிப் போன்றவற்றுக்கு சாயமேற்றுகின்றனர். சுத்திகரிக்காத சாயக்கழிவுநீர், நீர்நிலைகளில் திறந்து விடப்பட்டு, இயற்கை பாழ்படுத்தப்படுகிறது. மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பயந்து, முறைகேடு நிறுவனங்கள், சாயக்கழிவுநீரை, இரவு நேரங்களில் ரகசியமாக திறந்துவிடுகின்றன.