இந்த நிலையில் இந்த சாலையின் இரு புறங்களிலும் சமீபகாலமாக மருத்துவக் கழிவுகளை இரவு நேரங்களில் கொட்டி வருகின்றனர். சில நேரங்களில் மூட்டை மூட்டையாக கட்டி அப்பகுதிகளில் கழிவுகளை வீசி செல்கின்றனர். குறிப்பாக மருத்துவ கழிவுகளை அதிகமாக கொட்டும் ஒரு தளமாக இப்பகுதி மாறுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இப்பகுதிகளில் மழை காலங்களில் மழை நீர் வடிந்து செல்லும் வாய்க்காலாக கருதப்படும் பகுதியில் தான் பெரும்பாலான குப்பைகள் கொட்டப்பட்டு நீர் செல்லாத வண்ணம் அடைபட்டு இருக்கின்றது.
பேரூராட்சி மன்றத் நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் இருக்கும் குப்பைகளை அகற்றுவதோடு அப்பகுதியில் குப்பை கொட்டும் நபர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post இடைக்கோடு பேரூராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.