மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். முடிகண்டநல்லூரில் இருந்து மயிலாடுதுறை சென்ற அரசு பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.