ராஜாக்கமங்கலம்: ராஜாக்கமங்கலம் அருகே அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட 500 ஓலை பட்டாசுகள் கேட்பாரற்ற நிலையில் கிடந்ததை தொடர்ந்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் அடுத்து மேல மாவிளை என்ற இடத்தில் ராஜாக்கமங்கலம் போலீசார் ரோந்துப் பணியில் சென்றபோது அங்குள்ள பாழடைந்த படிப்பகம் ஒன்றின் மேல் பகுதியில் ஒரு பார்சல் கிடந்தது. அந்த பார்சலை போலீசார் எடுத்து சோதனை செய்த போது அதில் 500 ஓலைப்பட்டாசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக அது தயாரிக்கப்பட்டவை என்பது தெரிய வந்தது.