ராயக்கடா: ஒடிசா மாநிலத்தில் ஒரேநாளில் 64 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயக்கடா மாவட்டத்தில் கோட்லகுடா என்ற பகுதியில் இயங்கி வந்த 2 பள்ளி மாணவர் தங்கும் விடுதியில் இருக்கும் 257 மாணாக்கர்களுக்கு சுகாதாரத்துறையினர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 64 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கும் பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.