புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் செயல்படும் இஸ்ரேல் தூதரகத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையின் காரணமாக, அந்த தூதரகத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் டெல்லியில் உள்ள இஸ்ரேலின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதனால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.