சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி(திமுக) பேசுகையில்,’பல்லாவரம் தொகுதியில், அஸ்தினாபுரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் தாம்பரம், முடிச்சூர் என்று 6 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியது உள்ளது. எனவே பல்லாவரத்தில் புதிய கோட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்’ என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்,’அஸ்தினாபுரம் பகுதியில் ஒரு புதிய மின் நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது,