அலகாபாத் : இந்திய பெண்கள் தங்களது கணவரை விட்டுத் தர மாட்டார்கள் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் சுசில் குமார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர். இவர் இரண்டாவது மனைவிக்குத் தெரியாமல் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இது தெரியவந்ததும், இரண்டாவது மனைவி போலீசில் புகார் அளித்து விட்டு, விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர் சுஷில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் சுசில் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மனைவி தற்கொலைக்கு தான் பொறுப்பாக முடியாது என்றும் தங்களை விடுவிக்குமாறும் குற்றச்சாட்டை மறுத்து சுசில் குமார் தாக்கல் செய்த மனு, விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.