மயிலாடுதுறை: l பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பத்திரிகையாளர் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் 30.7.2018 அன்று நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ3 லட்சத்தில் இருந்து ரூ4 லட்சமாக உயர்த்தப்படும். l பத்திரிகையாளர் நல நிதியில் இருந்து வழங்கப்படும் மருத்துவ உதவி தொகை 2 லட்சத்தில் இருந்து, 2.50லட்சமாக நடப்பு நிதியாண்டில் உயர்த்தப்படும்.l தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் ரூ3 கோடி செலவில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும். l தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள அதியமான் கோட்டம் ரூ1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். l செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மணி மண்டபங்களில் அமர்ந்து போட்டி தேர்வுக்கு தயார் செய்ய ஏதுவாக மாணவர்களின் வசதிக்காக முதற்கட்டமாக 10 மணிமண்டபங்களில் அடிப்படை வசதிகள் ரூபாய் 1 கோடி யில் மேம்படுத்தப்படும்.