நாமகிரிப்பேட்டை : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி ராமசாமி. இவரது தாயார் பாவாய் (85). இவர் நேற்று காலை வழக்கம் போல் விவசாயத் தோட்டத்துக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென கால் தவறி, அருகில் இருந்த கிணற்றினுள் விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, உடனடியாக அங்கு வந்த ராமசாமி, கிணற்றில் தாய் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.