திருச்செங்கோடு : திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம் 87.கவுண்டம்பாளையம் ஊராட்சி குமரமங்கலம் 5வது வார்டு பகுதியில், கடந்த பல வருடங்களாக சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. வேறு வழியின்றி சாக்கடை இறங்கி நடப்பதால் பல்வேறு தொற்றுக்கு ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘நடுரோட்டில் கழிவுநீர் தேங்கிக் கிடப்பதால் தெருவை சுற்றி செல்ல வேண்டியுள்ளது.