கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ”5வது முறை முதலமைச்சராக சிறப்பான முறையில் பணியாற்றி தமிழக அரசியல் வரலாற்றில் பொற்கால ஆட்சியை தந்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா ஜூன் 3ம்தேதி தொடங்குகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லம், கருணை இல்லம், பார்வையற்றோர் பள்ளி, மாற்றுத்திறனாளிகள் தங்கும் இல்லம், மனநலம் குன்றியோர் தங்கும் விடுதி, தொழுநோயாளிகள் இல்லம் ஆகியவற்றில் தங்கியுள்ள ஆதரவற்றோர்களுக்கு அன்றைய தினம் அறுசுவை உணவு வழங்குவது, ரத்ததான முகாம், மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், மரக்கன்று நடுதல், ஏழை, எளியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்குதல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பான முறையில் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என்ற வரலாற்று சாதனையை படைத்து கடந்த 3 ஆண்டு பொற்கால ஆட்சியில் எண்ணிலடங்கா திட்டப்பணிகளை நிறைவேற்றிய தமிழக அரசின் சாதனைகளை விளக்கியும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழக அரசின் 3 ஆண்டு சாதனை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட பொருளாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட க.செல்வம் ஆகியோருக்கு இரவு, பகல் பாராமல் உழைத்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை மக்கள் விழாவாக கொண்டாட வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் appeared first on Dinakaran.